ஆப்கானிஸ்தானுக்கு படைகளை அனுப்புகிறது தென் கொரியா

ஆப்கானிஸ்தானுக்கு தென் கொரியா படையினர் 350 பேர் அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆப்கானில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக தென் கொரியாவிலிருந்து 100 தொழிலாளர்களும், 140 காவலர்களும் அனுப்பப்பட உள்ளனர். 

அத்துடன் தாலிபான் தீவிரவாதிகளிடமிருந்து அவர்களை பாதுகாப்பதற்காக, தென் கொரியா படையினர் 350 பேரும் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

அதே சமயம் ஆப்கான் செல்லும் இந்த தென் கொரிய படையினர், அமெரிக்க படைகளுடன் இணைந்து தாலிபான்களுக்கு எதிராக சண்டையில் ஈடுபடமாட்டார்கள் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No Response to "ஆப்கானிஸ்தானுக்கு படைகளை அனுப்புகிறது தென் கொரியா"

Post a Comment