பிரேசில்: நிலச்சரிவில் 15 பேர் பலி

பிரேசில் நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி 15 பேர் பலியாகினர். 

கடந்த ஒரு வார காலமாக பெய்து வந்த கன மழை காரணமாக சா பாலோ நகரின் கிழக்குப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. 

இதில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன.இதனால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி ஐந்து குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். 

உயிரிழந்த குழந்தைகளின் வயது 5 முதல் 14 வயது வரை இருக்கும் என மீட்பு பணிகளில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

தொடர்ந்து பெய்து வரும் கன மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக நூற்றுக்கணக்கானோர் தங்களது வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

No Response to "பிரேசில்: நிலச்சரிவில் 15 பேர் பலி"

Post a Comment