பாக்தாத்: குண்டுவெடிப்பில் 101 பேர் பலி; 105 காயம்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 101 பேர் பலியாகினர்; 105 பேர் காயமடைந்தனர். 

பாக்தாத்தின் மத்தியப் பகுதியில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பினால் அந்த இடமே அதிர்ந்ததாகவும், அடர்த்தியான கரும்புகை வானை நோக்கி எழுந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன. 

மேலும் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சத்தமும், அவசர உதவி வாகனங்கள் விரைந்து செல்லும் சப்தமும் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் பாக்தாத்தின் மத்தியப் பகுதியில் நிகழ்ந்த பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

No Response to "பாக்தாத்: குண்டுவெடிப்பில் 101 பேர் பலி; 105 காயம்"

Post a Comment