கோபன்ஹேகன் மாநாடு ஒப்பந்தம்: ஜி-77 நாடுகள் கவலை

பருவநிலை மாற்றம் தொடர்பாக விவாதிப்பதற்காக டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடைபெற உள்ள மாநாட்டில் நிறைவேற்றுவதற்காக, மிக அதிகமான ஒப்பந்த வரைவுகள் இடம்பெற்றுள்ளது குறித்து வளரும் நாடுகளின் அமைப்பான ஜி-77 கவலை தெரிவித்துள்ளது. 

மாநாடு இன்று தொடங்க உள்ளதையொட்டி சீனா மற்றும் வளரும் நாடுகளின் பிரதிநிதிகள் கடந்த இரு நாட்களாக மாநாட்டு அறையில் கூடி, மாநாட்டிற்கான தங்களது திட்டங்கள் மற்றும் மாநாட்டின் இறுதியில் எத்தகைய முடிவுகள் நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பது குறித்தும், குறிப்பிட்ட பிரச்னைகளில் தங்களது நிலைகள் என்னவாக இருக்கும் என்பது குறித்தும் விவாதித்தனர். 

அப்போது மாநாட்டில் நிறைவேற்றுவதற்காக, மிக அதிகமான ஒப்பந்த வரைவுகள் இடம்பெற்றுள்ளது குறித்து ஜி-77 நாடுகளின் பிரதிநிதிகள், தங்களது கவலையை தெரிவித்ததாக இந்திய பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்

No Response to "கோபன்ஹேகன் மாநாடு ஒப்பந்தம்: ஜி-77 நாடுகள் கவலை"

Post a Comment