வடக்கு அபிவிருத்தியில் பங்குபற்றுங்கள்

எதிர்வரும் ஜனவரி மாதம் 12ம் திகதி யாழ்பாணப் பல்கலைக்கலகத்தில் நடைபெறவுள்ள போரினால் பாதிக்கப்பட்டு சிதவடைந்துள்ள யாழ்பாணத்தை கட்டியெழுப்புவது தொடர்பான கலந்துரையாடலுக்கு புலம்பெயர் தமிழர்கள் அரசினால் அழைக்கப்பட்டுள்ளனர்.


இது தொடர்பான அழைப்பு வடக்கு அபிவிருத்தி சமூகசேவைகள் அமைச்சர் திரு. டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் விடுக்கப்பட்டுள்ளது.  இதன் நோக்கம் வடக்கின் நிலை பற்றி புலம்பெயர் மக்களுக்கு தெரியப்படுத்துவதும் அதன் அபிவிருத்தி பணிகளில் அவர்களை இணைத்துக் கொள்வதுமாகும்..


இந்த நிகழ்வில் வடக்கின் அபிவிருத்தி தொடர்பான தங்களின் திட்ட அறிக்கைகளை கலந்து கொள்ளும் புத்திஜீவிகள் அமைச்சிக்கு சமர்ப்பிக்க முடியும்.


இது தொடர்பாக அமைச்சர் தெரிவிக்கையில் “ இது  நாம் அனைவரும் ஒன்றினைந்து வடக்கை கட்டியெழுப்புவதற்கான நேரமாகும். அரசியல் பாகுபாடுகள் பாராட்ட இது தருணம் அல்ல. யுத்தம் காரணமாக வடக்கிலிருந்து புலம்பெயர்ந்த வைத்தியர்கள், பெறியியலாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் அனைவரும் தமது நாடுகளுக்கு திரும்பி தமிழ் மக்களின் சுவிட்சித்திற்காக உழைக்க வேண்டிய நேரம் இது. புலம்பெயர் தமிழர்கள் திரும்பி வந்து அவர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கான நேரம் இது அதனை அவர்கள் இழக்க கூடாது என்றார்.


இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் அமைச்சரின் அலுவலகத்தை இந்த தொலைபேசி என்னில் தொடர்பு கொள்ளலாம். 00 94-212 229 824

No Response to "வடக்கு அபிவிருத்தியில் பங்குபற்றுங்கள்"

Post a Comment