மலையத்தில் புதிய தொழிற்சங்கம் உதயம்

ஐக்கிய தொழிற்சங்கம் என்ற பெயரில் மலையகத்தில் புதிய தொழிற்சங்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் ஊடகவியலாளர் ஒருவரின் வழிகாட்டலின்பேரில் ஹற்றன் வெலிஓயா மேற்பிரிவில் இதன் ஆரம்ப வைபவங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டத்தரணி எஸ். கிருஸ்ணகுமார் இத் தொழிற்சங்கத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் தலைமைக் காரியாலயம் மாத்தளையில் திறந்துவைக்கப்பட்டு இயங்கிவருவதாக தொழிற்சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் ஒருவர் எமது இணையத்தளத்துக்கு தெரிவித்தார்.

தொழிலாளர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க நியாயமான முறையில் போராடப்போவதாகவும் சந்தாவை நோக்கமாகக் கொள்ளாமல் தொழிலாளர்களின் நலனுக்காக எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் தொழிற்சங்கத்தின் புதிய உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்
(வீரகேசரி) 

No Response to "மலையத்தில் புதிய தொழிற்சங்கம் உதயம்"

Post a Comment