இல‌ங்கை அதிபர் தேர்தல் : சிவாஜிலிங்கம் சுயேட்சையாக போட்டி!

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தனித்துப் போட்டியிடுகிறார். 

அதிபர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதற்கான வைப்புப் பணத்தை தேர்தல் செயலகத்தில் செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளரை நிறுத்துவதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், சிவாஜிலிங்கம் சுயேட்சையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

No Response to "இல‌ங்கை அதிபர் தேர்தல் : சிவாஜிலிங்கம் சுயேட்சையாக போட்டி!"

Post a Comment