பாதுகாப்பு குறைப்பு : பொன்சேகா நீதிமன்றத்தில் மனு

தனது பாதுகாப்பு குறைக்கப்பட்டது, மற்றும் தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் இருந்து தன்னை வெளியேற அரசு உத்தரவிட்டதை எதிர்த்து சரத்பொன்சேகா அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை, இலங்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். 

நாட்டின் இராணுவத் தளபதியாக, பதவிக்காலம் முடிந்தும் ஜனாதிபதியால் அது நீடிக்கப்பட்டு, அதிபர் ராஜபக்சவின் நண்பராக உலா வந்த சரத் பொன்சேகா இன்று அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யுமளவிற்கு நிலை வந்துவிட்டது.

தமிழ் மக்கள் பலர் சிங்கள அடக்குமுறைக்கு எதிராக பல தடவைகள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தபோதேல்லாம் எள்ளி நகையாடிய பல சிங்கள அரசியல் பிரமுகர்கள், இராணுவ மற்றும் போலீஸ் உயரதிகாரிகளுக்கும் தற்போது அதே நிலை திரும்பியிருப்பது அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 

காரியம் ஆகியவுடன் கைகழுவி விடும் ராஜ பக்சவின் குணம் இப்போது அவர்களுக்கு புரிந்திருக்கும்.தற்போது இருக்க இடமில்லாமல், பாதுகாப்பும் குறைக்கப்பட்ட சூழ் நிலையில் வெளியில் சென்றுவரவும் முடியாமல் சரத் அல்லாடுவதாக அறியப்படுகிறது.

எனவே சிறிது காலம் தாக்க்குப்பிடிக்க இவர் தற்போது அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துவிட்டு அதில் குளிர்காய எண்ணியுள்ளதாக கூறப்படுகிறது

No Response to "பாதுகாப்பு குறைப்பு : பொன்சேகா நீதிமன்றத்தில் மனு"

Post a Comment