வடக்கு - கிழக்கை இணைக்க சம்மதமா ?

வடக்கு, கிழக்குப் பகுதிகளை இணைப்பதற்கு தாம் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளியான தகவலை இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச மறுத்துள்ளார். 

வடக்கு கிழக்கு இணைந்த தனியான அலகு என்பது விடுதலைப் புலிகளின் கோரிக்கையாகவே இருந்து வந்துள்ளதாகவும், எனினும் அதனை தற்போது நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

தமிழ் பத்திரிகை ஆசிரியர்களை அதிபர் மாளிகையில் சந்தித்து பேசிய போதே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். 

இதனிடையே, இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அண்மையில் இலங்கை சென்றபோது, வடக்கு கிழக்கு இணைப்புக்கு ராஜபக்ச சம்மதம் தெரிவித்ததாக கூறப்படும் செய்தியை, இந்திய அரசுதான் வேண்டுமென்றே திட்டமிட்ட முறையில் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No Response to "வடக்கு - கிழக்கை இணைக்க சம்மதமா ?"

Post a Comment