Saturday 28 November 2009

ஆப்கானில் குண்டு வெடிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அயல்நாட்டு தூதரகங்கள் அதிகமுள்ள இடத்தில் இன்று பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது.

அயல் நாட்டு தூதரகங்கள் மற்றும் நிறுவனங்கள் நிறைந்த வாஷிர் அக்பர் கான் என்ற இடத்தில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயமோ அல்லது உயிர் சேதமோ ஏற்படவில்லை. 

அதே சமயம் குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு அருகிலுள்ள கட்டடத்தின் சுவர் இலேசாக சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்றபோதிலும், தாலிபான் இயக்கம்தான் இதற்கு காரணமாக இருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment