Friday 27 November 2009

350 பேரை இன்னும் காணவில்லை- சவூதியில் வெள்ள அனர்த்தம்

ஜெத்தா நகரில் பெய்ந்த கடும் மழை காரணமாகவும் அங்கு ஏற்பட்ட மண் சரிவுகளினாலும் இதுவரை வெள்ளிக்கிழமை 85 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அல் குவாஸி நகரல் 88 பேரின் சடலங்கள் கண்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் 1251  பேர் வீடுகள் சொத்துக்களை இழந்திருப்பதாகவும் அரபு நியூஸ் தெரிவித்துள்ளது.

இந்த மீட்புப் பணிகள் இதுவரை முடிவடையாமையால் சரியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பதுடன் சரியான அனர்த்த முகாமைத்துவம் சரியான முன்னெடுக்கப்படவில்லை என சவூதி வாழ் மக்கள் அரசை குற்றம் சாட்டியுள்ளனர்.

அத்துடன் சவூதியில் பெஸ் புக்கைப் பாவிப்பவர்களும் தங்களின் கடும் கோபத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.

அரபு நியூஸ் அனர்த்த முகாமைத்துவத்தை நக்கலடித்து ஒரு காட்டூனை வெளியிட்டுள்ளது
வாசகர்களின் பார்வைக்கு


No comments:

Post a Comment