Saturday 12 December 2009

சிறார் போராளிகள் குடும்பங்களுடன் இணைக்கப்பட வேண்டும்: ஐநா வலியுறுத்தல்

இலங்கையில் தனி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுவர் போராளிகளை அவர்களின் குடும்பங்களுடன் இணைக்க வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. 

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுவர் போராளிகளை அவர்களின் குடும்பங்களுடன் இணைக்க வேண்டும் என சிறார்கள் மற்றும் ஆயுத மோதல்கள் விவகாரத்தை கவனிக்கும் ஐ.நா. சிறப்புப் பிரதிநிதி ஜெனரல் பேட்ரிக் கொமேர் கூறியுள்ளார்.

இவ்வாறான சிறுவர்கள் அவர்களின் குடும்பங்களுடன் இணைந்து வாழும்போதுதான் உளவியல் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவார்கள் என்பது உலகில் மோதல்களில் ஈடுபட்ட சிறுவர்கள் தொடர்பில் கண்டறியப்பட்ட உண்மை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment